வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தில் இந்த வருடத்திற்கான கந்தசஷ்டி வழமைபோல் நடைபெறும். ஆனால் பக்தர்களுக்கும் விரதகாரர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலனசபைத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் சமகால கொரோனா சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ஆலய பரிபாலனசபையின் உயர்பீடக்கூட்டத்தில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்துக்களின் மிகமுக்கிய விரதங்களிலொன்றான கந்தசஷ்டி விரதம் இம்முறை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
ஆறுநாட்கள் அனுஸ்டிக்கும் இவ் விரதத்தை பலநூறு பக்தர்கள் எமது முருகனாலயத்தில் அனுஸ்டிப்பது வழமை.
ஆனால் இம்முறை கொரோனா சூழலால் அதற்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் இறுதிநாள் இடம்பெறும் சூரசம்ஹார நிகழ்வும் நடாத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வர அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அதேவேளை அந்த ஆறு நாட்களும் தினப்பூஜை ஆலயகுரு சிவஸ்ரீ நீதி.அங்குசநாதக்குருக்கள் தலைமையில் இடம்பெறும். அன்றைய உபயகாரர் மாத்திரம் ஆலயத்திற்குவந்து பூஜையில் பங்கேற்கமுடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!