அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! கிழக்கில் 200 ஆக அதிகரிப்பு
அக்கரைப்பற்றில் மேலும் 13 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
இது வரை அக்கரைப்பற்றில் கொரோன தொற்றாளர்கள் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட ரீதியில்
அம்பாறை - 96
மட்டக்களப்பு - 88
திருகோணமலை - 16
மாகாணத்தில் ஐந்து சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!