
(ASK )
இலங்கை அரசு சுகாதார விதிமுறைகளுடன் அரச தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு அனுமதிகள் வழங்கி மக்களின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வழங்கி வரும் ஆரோக்கியமான அனுமதிகளுக்கு அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை
இலங்கை மக்களின் ஆன்மீக ரீதியிலான வழிபாடுகளுக்கு ஆலய உற்சவங்களை சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்வதற்கும் அரசு அனுமதிகளை வழங்க வேண்டும் என அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலப் ஆதீனப் பணிப்பாளர் இறைபணிச் செம்மல் கண.இராஜரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் இனி வருகின்ற மாதங்கள் இந்துக்களின் அம்மன் ஆலயங்களின் திருக்குளிர்த்தி உற்சவ காலங்கள் என்றபடியால் இந்துகள் வருடம் தோரும் நிறைவேற்றி வருகின்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்புடைய வகையில் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஆலயங்களின் உற்சவங்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும்.
இவ் அனுமதிகளை அரசின் பிரதேச ரீதியான சுகாதார நிருவாக மற்றும் முப்படை அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்றி இவ் மதக் கடமைகளை நிறைவேற்றும் வகையிலான ஒரு செயல் முறை ரீதியாக இந்துசமய கலாசார திணைக்களம் அரசுடன் இணைந்து ஆலய நிருவாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பாதுகாப்பான சுகாதார வழிமுறைகளின் ஊடாக ஆலய உற்சவங்களை நடாத்துவதற்கான அனுமதிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.