Contact Form

Name

Email *

Message *

ஆழ்கடல் மீனவர்கள் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்

(வி.சுகு ) அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலை தற்போது படிப்படியாக சீரடைந்து வருகின்றது. இதன் காரணமாக ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த மீனவர்கள்…

Image

(வி.சுகு )

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலை தற்போது படிப்படியாக சீரடைந்து வருகின்றது.
இதன் காரணமாக ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த மீனவர்கள் தங்களது தொழிலை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.



ஆழ்கடலில் ஏற்கனவே போடப்பட்ட ஒரு சில மீனவர்களின் வலைகள் கடல் கொந்தளிப்பு காரணமாக கடலோடு சென்ற நிலையில், இருக்கின்ற வலைகளை வைத்து தொழிலை ஆரம்பித்துள்ளனர்.

நேற்யை தினமும் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த சில மீனவர்கள் தமது வள்ளங்களுடன் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றதை காணமுடிந்ததது.
ஒரு சில மீனவர்கள் பழுதடைந்த தங்களது வலைகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

இதேநேரம் அண்மைக்காலமாக மீனவர்கள் கடலரிப்பு, கடல் கொந்தளிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமது தொழிலை இழந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

You may like these posts