அறம் வழி அறக்கட்டளை அமைப்பால் அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த சுமார் 50 குடும்பங்களுக்கான பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான நன்கொடை லண்டனில் வசிக்கும் கினோதினி நாதன் மற்றும் ரிஷாந்தன் சபாபதிபிள்ளை அவர்களால் வழங்கப்பட்டது.
திருக்கோவில் காஞ்சிரங்குடா பிரதேசத்தை சேர்ந்த சுமார் 55 குடும்பங்களுக்கு பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான நன்கொடையினை கனடாவில் வசிக்கும் விஜி தரணி அவர்கள் வழங்கியிருந்தார்கள், அக்கரைப்பற்று மகாசக்தி கிராமத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் (110 குடும்பம்) பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான நன்கொடையினை லண்டனில் வசிக்கும் திரு திருமதி பேரானந்தம் அவர்கள் வழங்கியிருந்தார்கள்.