
[NR]
திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வாருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் - 2019
திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வாருடாந்த ஆடி அமாவாசை உற்சவமானது கடந்த 2019.07.14 திகதி வெகுசிறப்பான முறையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக 17 நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று 2019.07.31 திகதி புதன்கிழமை நேற்றையதினம் காலை 11.23 அளவில் பல்லாயிரக்கணக்கான அடியார்களின் அரோகரா கோசத்துடன் கிழக்கிலங்கையின் வங்கக்கடலில் சித்திர வேலாயுத சுவாமியின் ஆடி அமாவாசை சமுத்திர தீர்த்தோற்சவமானது வெகு சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இக்கிரியைகள் யாவும் மஹோற்சவ பிரதமகுரு சிவஸ்ரீ.சண்முகமகேஸ்வரக்குருக்கள் அவர்களினால் நடாத்தி வைக்கப்பட்டது. இதன்போது பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர் .
மேலும் இன்றைய தினம் 2019.08.01 திகதி பூங்காவன திருவிழாவும், 2019.08.02 திகதி வைரவர் பூஜையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





























