
தேசியரீதியில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வார மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு திருக்கோவில் வலயக் கல்விப் பாடசாலைகளில் நேற்று இடம்பெற்றது.
மாணவர்களுக்கான விழிப்புணர்வு பற்றிய சிறப்புரை. இடம் பெற்றதை தொடர்ந்து மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் மாணவர்களுக்கு இராணுத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது
இவ் நிகழ்வில் இப்பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை )
தாண்டியடி விக்கினேஸ்வரா வித்தியாலயம்
சக்தி வித்தியாலயம்
கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்