Contact Form

Name

Email *

Message *

தேசிய பாடசாலையின் OSA இன் O/L மாணவர்களுக்கான இறுதி நாள் கருத்தரங்கு - 2018

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்கத்தினரின் ஏற்பாட்டில்  தேசிய பாடசாலையின் 2018 இவ்வாண்டில் (O/L) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்…

Image



தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்கத்தினரின் ஏற்பாட்டில்  தேசிய பாடசாலையின் 2018 இவ்வாண்டில் (O/L) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவ, மாணவிகளுக்காக மாணவர்கள் மத்தியில் "A" தர சித்தியினை அதிகரிக்கும் நோக்குடனும் மற்றும்  "W" தர சித்தியினை குறைத்து S  அல்லது C தர சித்தியினை அடையச்செய்யும் நோக்குடன்  பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கானது கடந்த 30.10.2018 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் இறுதி நாள் கருத்தரங்கானது  05.11.2018 திகதி தேசிய பாடசாலையின் அதிபர் செல்வி வசந்தகோகிலா தலைமையில் நடைபெற்றது.


இன்நிகழ்வின்  போது அதிதிகளாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு வ.குணாளன் அவர்களும், பழைய மாணவர்சங்கத்தின் உப தலைவர் பி.பாலேந்திரகுமார், பழைய மாணவர்சங்கத்தின் செயலாளர் ஆர்.ரதீசன் மற்றும் செயற்குழு  உறுப்பினர்கள் ,  தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இக் கருத்தரங்கானது ஆர்.என் சீடி கோம் (RN CD Home) தம்பிலுவில், செல்வம் கென்செட்சன்( Selvam Construction) தம்பிலுவில் ,றோஜித் நகைத்தொழிலகம்(Rojith Gold House) தம்பிலுவில், சனோ அக்றோ கெமிகல்ஸ்(Sano Agro Chemical)  தம்பிலுவில் ஆகிய  அனுசரனையாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்கத்தினரின் மனமார்ந்த பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.















You may like these posts

Comments