Contact Form

Name

Email *

Message *

நாளை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான யந்திர பூஜை

[NR] இந்து சமுத்திரத்தின் முத்தாய் திகழும்  இலங்காபுரியின் கிழக்கு இலங்கையின் வரலாற்றுச்சிறப்புமிக்கதும் பெருமை கொண்டதுமான திருத்தலங்களில் ஒன்றான  திருக்கோவில் ஸ்ரீ சி…

Image


[NR]

இந்து சமுத்திரத்தின் முத்தாய் திகழும்  இலங்காபுரியின் கிழக்கு இலங்கையின் வரலாற்றுச்சிறப்புமிக்கதும் பெருமை கொண்டதுமான திருத்தலங்களில் ஒன்றான  திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிவரும் ஆனி மாதம் இருபத்தைந்தாம் 25.06.2018 திகதி மேற்கொள்வதற்கு திருவருள் கைகூடியுள்ளது. இதன் ஆரம்ப கிரியைகளுள் ஒன்றான "யந்திர பூஜை" நிகழ்வானது நாளை 06.05.2018 திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றையதினம் சுவாமி சித்திரவேலாயுதரின் ஆசியுடனும் அனுக்கிரகத்துடனும் நடைபெறவுள்ளது.


அன்றையதினம் காலை 08.00மணி தொடக்கம் 10.00மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்களின் அவர்களின் தலைமையிலான 5 குருமார்களின் பங்குபற்றுதலுடன் கிரியைகள் யாவும் நடைபெற்று பூஜை நிகழ்வானது இடம்பெறவுள்ளது.

இவ் யந்திர பூஜை நிகழ்வில் அனைத்து பக்த அடியார்களும் கலந்து கொண்டு முருகப்பெருமானின் திருவருளை பெற்றேய்யுமாறு ஆலய பரிபாலன சபை சார்பாக தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் மற்றும் செயலாளர் ஏ.செல்வராஜா தெரிவித்தனர்.

தைபோதைய ஆலயத்தின் தோற்றத்தினை கீழுள்ள புகைப்படத்தில் காணலாம்.


















You may like these posts

Comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!