Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா - 2018

[NR] திருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா-2018 நிகழ்வானது இன்று 12.04.2018 புதன்கிழமை திருக்கோவில் விபுலானந்தா அக்கடமியின் ஸ்தாபகரும் மட்டக்களப்பு உ…

Image


[NR]

திருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா-2018 நிகழ்வானது இன்று 12.04.2018 புதன்கிழமை திருக்கோவில் விபுலானந்தா அக்கடமியின் ஸ்தாபகரும் மட்டக்களப்பு உயர் தொழிநுட்பக்கல்லூரியின் பணிப்பாளருமான  திரு. S .ஜெயபாலன் அவர்களின் தலைமையில்  தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.


திருக்கோவில் பிரதேசத்தில் 2016/2017 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கும், 2017ல் க.பொ.த - சாதாரண தர பரீட்சையில் பாடசாலை மட்டத்தில் அதி உயர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களது சிறப்புமிகு சாதனையினைப் பாராட்டியும்,  கௌரவப்படுத்தும் வகையிலும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டதோடு மேலும் மாணவர்களினால் கற்பித்த ஆசிரியர்ளுக்கு நினைவு சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வானது திருக்கோவில் ஸ்ரீ அக்கிராச பிள்ளையார்  ஆலய பிரதமகுரு லதீப  சர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமானது, இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக  திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன், விசேட அதிதியாக   அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருமான  திரு தி.ஜே.அதிசயராஜ், நட்சத்திர அதிதிகளாக  திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.S.தர்மபாலன் அவர்களும் மற்றும் பொத்துவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.சோ.இரவீந்திரன், அதிதிகாளாக    தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் அதிபர்  திரு.வ.ஜயந்தன் மற்றும் திருக்கோவில் கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். 

 மேலும் இந்நிகழ்வின்  போது  மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.















































You may like these posts

Comments