நாடு முழுவதும் பல்வேறு பட்ட பிரதேசங்களிலும் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனுக்கு அவரின் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அதி மேதகு ஜனாதிபதியிடம் பொது மன்னிப்பு வழங்க கோரி இடம் பெற்றுவருகின்ற கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு எமது திருக்கோவில் பிரதேசத்திலும் 25.03.2018 திகதி நேற்றையதினம் இடம்பெற்றது. தொடர்ந்து இது இரண்டாம் நாளாக இன்று 26.03.2018 தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்னால் இடம்பெற்றது.
இதில் குழந்தைகள், மாணவர்கள், பெரியவர், பொது மக்கள் கலந்து கொண்டனர் பல பொது மக்கள், மாணவர்கள், பலரும் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ள மகஜரில் கையெழுத்திட்டனர்.
இந்த முயற்சி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைபிணை எமது பிரதேச இளைஞர்கள் பெரிதும் எதிபார்த்து நிற்கின்றனர் . இன் நிகழ்வினை தம்பிலுவில், திருக்கோவில் பிரதேச தமிழ் இளைஞர்கள் மற்றும் தமிழ் இளைஞர் ஒண்றியமும் இதனை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




























Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!