கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களும் காணொளிகளும் பகிரப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், வன்முறைகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சமூக ஊடகங்களின் பாவனையை அரசாங்கம் தற்காலிகமாக துண்டித்திருந்தது.
தற்போது நாடு இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில், வைபர் மற்றும் வட்ஸ் அப் மீதான தடைகள் நேற்று நீக்கப்பட்டிருந்தன. தற்போது ஃபேஸ்புக் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!