திருக்கோவில் கல்வி வலயத்தின் திகோ/ விநாயகபுரம் பரமேஸ்வரா வித்தியாலத்தின் சர்வதேச சிறுவர்தின நிகழ்வானது 2017.09.02 திகதி திங்கட்கிழமை நேற்றையதினம் வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் அதிபர் திருமதி.க.பாலசுப்பிரமணியம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பொது அதிதியாக திருக்கோவில் மக்கள் வங்கியின் முகாமையாளர் ஏ.ஜி.நிசாம் அவர்களும், மற்றும் வங்கி உத்தியோகத்தர்களும் மாணவச் செல்வங்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் போது மாணவர்களுக்கு அதிதிகளினால் உரைகளும் மற்றும் மக்கள் வங்கியில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு வைப்பு செய்த மாணவர்களுக்கு வங்கியினால் பரிசில்களும் வழங்கப்பட்டது. மேலும் மக்கள் வங்கியின் முகாமையாளர் அவர்களினால் பாடசாலைக்கு ஒரு மரம் அன்பளிப்பாக வழங்கியதுடன் அதனை நடுவதனையும் படத்தில் காணலாம் .












Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!