Contact Form

Name

Email *

Message *

க.பொ.த சாதாரணப்பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி அறிவிப்பு..!

இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விப்பொதுத்தராதர சாதரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதி திகதி இம்மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக இலங்கை பரீட்சைகள் திணைக…

Image
இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விப்பொதுத்தராதர சாதரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதி திகதி இம்மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


மேலும் பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் பாடசாலை அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப் படிவங்களும், பரீட்சை நிலையங்கள் தொடர்பான விபரங்களும் கடந்த வியாழக்கிழமை வெளியான பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விண்ணப்பத்திற்கான இறுதி திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுமெனவும், புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 21 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may like these posts

Comments