Contact Form

Name

Email *

Message *

முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்களுக்கு புதிய சட்ட விதிமுறை

முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் புதிய சட்ட விதிமுறைகளைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ள எதிர்வரும் வாரம் நடவடிக்கை எடுக்கவுள்ள…

Image
முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் புதிய சட்ட விதிமுறைகளைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ள எதிர்வரும் வாரம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது.

தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.

அத்துடன், முச்சக்கரவண்டிகளில் மீட்டர் பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முச்சக்கரவண்டிகள் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி சபை மற்றும் பொலிஸ் நிலையத்தில் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என பேராசிரியர் சிசிர கோதாகொட வலியுறுத்தினார்.

You may like these posts

Comments