இலங்கை சனத்தொகையில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் கூட இந் நோய் உயிர் அபாயமிக்க நோய் என்பதனை அறிந்திருப்பதில்லை. எனவே இது குறித்து மக்களை விழிப்பூட்ட வேண்டியது அவசியம் என கராப்பிட்டிய வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் முகுந்தன் தெரிவித்தார் சர்வதேச ஆஸ்துமா தினம் நேற்று முன்தினம் 01.05.2017 அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கமைய மக்களை விழிப்பூட்டும் நோக்கில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஆஸ்துமா என்பது பெரும்பாலானவர்களில் காணப்படும் சுவாச நோயாகும். இந்நோய் சுவாசிப்பதில் சிரமம்,மார்பு இறுக்கம், போன்ற அறிகுறிகளுடன் ஆரம்பித்து தீவிரமடையும் போது வழக்கத்திற்கு மாறான இருமல் ஏற்படும்.
ஆஸ்துமா முக்கியமாக அதன் மருத்துவ அறிகுறிகளால் கண்டறியப்பட்டு நீண்டகால மருந்துப் பாவனையின் மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது. இது குழந்தை பருவத்திலிருந்து வயதுவந்தோர் வரை அனைவரையும் பாதிக்கும். சாதாரண, கடுமையாக மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை வரை இந்நோய் தாக்கம் காணப்படுகின்றது.
கடந்த ஆண்டுகளில் சுற்றுச்சூழல் மாசு பாடு காரணமாக இந் நோய் அதிகரித்து வந்துள்ளது. உலகளாவிய ரீதியில் 334 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக சனத்தொகையில் 14 சதவீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏனைய நோய்களை போன்று ஆஸ்துமாவை வரும்முன் தடுப்பது சிகிச்சையை விடவும் சிறந்ததாகும். ஆஸ்துமாவை தடுக்கும் மிக முக்கியமானதும் பயனுள்ளதுமான வழி ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணிகளை தவிர்ப்பதாகும்.
ஒவ்வாமை மனிதனுக்கு மனிதன் வேறுப்பட்டதாகும். இதனை இனங்கண்டு தவிர்ப்பது மிகவும் முக்கியமானதாகும். ஆஸ்துமாவின் அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக வைத்தியரை நாடவேண்டியது அவசியமாகும்.
ஆஸ்துமா குறித்து மக்கள் பூரணமாக அறிந்திருக்க வேண்டும். இதனை இழிவான மக்களை விழிப்பூட்ட வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஆஸ்துமா என்பது பெரும்பாலானவர்களில் காணப்படும் சுவாச நோயாகும். இந்நோய் சுவாசிப்பதில் சிரமம்,மார்பு இறுக்கம், போன்ற அறிகுறிகளுடன் ஆரம்பித்து தீவிரமடையும் போது வழக்கத்திற்கு மாறான இருமல் ஏற்படும்.
ஆஸ்துமா முக்கியமாக அதன் மருத்துவ அறிகுறிகளால் கண்டறியப்பட்டு நீண்டகால மருந்துப் பாவனையின் மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது. இது குழந்தை பருவத்திலிருந்து வயதுவந்தோர் வரை அனைவரையும் பாதிக்கும். சாதாரண, கடுமையாக மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை வரை இந்நோய் தாக்கம் காணப்படுகின்றது.
கடந்த ஆண்டுகளில் சுற்றுச்சூழல் மாசு பாடு காரணமாக இந் நோய் அதிகரித்து வந்துள்ளது. உலகளாவிய ரீதியில் 334 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக சனத்தொகையில் 14 சதவீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏனைய நோய்களை போன்று ஆஸ்துமாவை வரும்முன் தடுப்பது சிகிச்சையை விடவும் சிறந்ததாகும். ஆஸ்துமாவை தடுக்கும் மிக முக்கியமானதும் பயனுள்ளதுமான வழி ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணிகளை தவிர்ப்பதாகும்.
ஒவ்வாமை மனிதனுக்கு மனிதன் வேறுப்பட்டதாகும். இதனை இனங்கண்டு தவிர்ப்பது மிகவும் முக்கியமானதாகும். ஆஸ்துமாவின் அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக வைத்தியரை நாடவேண்டியது அவசியமாகும்.
ஆஸ்துமா குறித்து மக்கள் பூரணமாக அறிந்திருக்க வேண்டும். இதனை இழிவான மக்களை விழிப்பூட்ட வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!