2004.12.26 அன்று ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலைத்தாக்கத்தில் உயிர் நீத்த எமது உறவுகளின் 12 வது ஆண்டு நிறைவு தினத்தினை முன்னிட்டு தம்பட்டை ஏலேவேன் ஸ்டார்(ELEVEN STAR) விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வமத பிராத்தனை நிகழ்வானது 26.12.2016 திங்கட்கிழமை நேற்று தம்பட்டை ஏலேவேன் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் திரு.பிரசாந்த ஹேரத் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர், பெண்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் ஏலேவேன் ஸ்டார்(ELEVEN STAR) விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள், ஆழிப்பேரலைத்தாக்கத்தில் உயிர் நீத்தவர்களின் உறவுகள், பொது மக்கள் மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது கோர ஆழிப்பேரலைத்தாக்கத்தில் தமது உறவுகளை இழந்தவர்கள் கண்ணீர் மல்க, தீபம் ஏற்றி உறவுகளை நினைவு கூர்ந்து பிராத்தனை செய்வதனை காணலாம்.














Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!