Contact Form

Name

Email *

Message *

பிடல் கெஸ்ட்ரோவின் அஸ்திக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியான ஃபிடல் கெஸ்ட்ரோவின் அஸ்திக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்திவருகின்றனர். கியூப புரட்சியின் தந்தையான ஃபிடல் கெஸ்ட்ரோ கடந்த சன…

Image
கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியான ஃபிடல் கெஸ்ட்ரோவின் அஸ்திக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
கியூப புரட்சியின் தந்தையான ஃபிடல் கெஸ்ட்ரோ கடந்த சனிக்கிழமை தனது 90 வயதில் காலமானார்.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் ஆரம்ப அம்சமாக 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இராணுவ மரியாதையுடன் ஹவானா மற்றும் சான்டியாகோவில் பேரணிகள் ஆரம்பமாகின.
சான்டியாகோவில் 1959ஆம் ஆண்டு ஃபிடல் கெஸ்ட்ரோ அதிகாரபூர்வமாக கியூப புரட்சியை அறிவித்தார்.
காஸ்ட்ரோவின் தேசியவாத மற்றும், சோசலிச தத்துவங்களையும் இறுதிவரை கடைப்பிடிப்பதற்கான உறுதிமொழி ஒன்றில் துக்கம் அனுஷ்டித்தவர்கள் கையெழுத்திட்டனர்.
எதிர்வரும் புதன்கிழமை முதல், போர்களின் போது கெஸ்ட்ரோவின் புரட்சியாளர்கள் பயணித்த பாதை வழியாக காஸ்ட்ரோவின் அஸ்தி எடுத்து செல்லப்படவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அவருடைய அஸ்தி இறுதியாக சான்டியாகோவிற்கு கொண்டுசெல்லப்பட்டு இறுதி கிரியைகள் நடைபெறவுளள்ளன.
இதேவேளை, பிடல் கெஸ்ட்ரோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என வட கொரியா நேற்று அறிவித்திருந்தது.
கெஸ்ட்ரோவுக்கு மரியாதை செலுத்தும் முகமாக தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் நாளை வரை துக்கம் அனுஷ்டிக்கப்படும் எனவும் வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



You may like these posts

Comments