Contact Form

Name

Email *

Message *

எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் 2 ஆம் திகதி தொடக்கம் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. வட் வரி அதிகரிப்பின் காரண…

Image
எதிர்வரும் 2 ஆம் திகதி தொடக்கம் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
வட் வரி அதிகரிப்பின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளார் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சிற்றுண்டிகளின் வட் வரி அதிகரிப்பு தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மொத்த மற்றும் சில்லறை பொருட்களுக்கான வட் வரி அதிகரிப்பிற்கு அமைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் என அசேல சம்பத் கூறியுள்ளார்.
குறிப்பாக 5, 10 மற்றும் 15 ரூபாவால் சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 2 ஆம் திகதி தொடக்கம் கட்டயாம் இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளார் அசேல சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.

You may like these posts

Comments