
இன்நிகழ்வின் போது விசேட அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயளாளர் திரு..ஜெகதீசன் மற்றும் திருக்கோவில் கோட்டை கல்விப்பணிப்பாளர், திருக்கோவில் வலய முன்பள்ளி ஒருங்கினைப்பாளர் திரு.S.தர்மபாலன், திருநாவுக்கரசு நாயனார் குருகுல முகாமைத்துவ பணிப்பாளர் திரு.கண.இராஜரெத்தினம் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக பொத்துவில் கோட்டை கல்விப்பணிப்பாளர் திரு.V.ஜெயந்தன், திருக்கோவில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.நடேசன், அதிதிகளாக தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய அதிபர் திரு.S.இரவீந்திரன், பொதுசுகாதாரபரிசோதகர் திரு.சுதாகரன், பொதுசுகாதார மருத்துவ மாது திருமதி.P.வதன்ராஜ் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவ் விடுகைவிழாவின் போது இவ் முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்விகள் சிறப்பாக இடம் பெற்றது.