நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பஸ்களில் பொருத்தப்பட்டிருக்கும் வானொலி பெட்டிகள் மற்றும் ஒலி பெருக்கிகளினால் அதிக சத்தம் வௌியேறுவதாக பொது மக்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரைவில் சோதனைகள் முன்னெடுக்கவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி தெரிவித்துள்ளார்.
அதிக சப்தத்தினால் போக்குவரத்தின் போது பயணிகள் சிக்கல்களை எதிர்கொள்ளவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்