விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலய சங்காபிஷேக வைபவம் நேற்று (06.05.2015) புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் மற்றும் காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம் ஆகியவைகளின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் தலைமையில் நடைபெற்ற சங்காபிஷேக வைபவத்தின்போது திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து புறப்பட்ட பாற்குடப் பவணி நீண்ட தூரம் பயணம் செய்து வினாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயத்தை அடைந்ததும் அம்மனுக்கு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் தலைமையில் பாலாபிஷேகம் இடம் பெற்றதைத் தொடர்ந்து 1008 சங்குகளால் சங்காபிஷேகம் செய்யப்பட்டது.
நிகழ்வில் பிரதேநத்திலுள்ள ஆலயங்களின் பிரதம குருக்கள் உட்பட குருக்கள் மார்கள் மற்றும் ஏராளமான பெண் பக்தர்கள் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரதேநத்திலுள்ள ஆலயங்களின் பிரதம குருக்கள் உட்பட குருக்கள் மார்கள் மற்றும் ஏராளமான பெண் பக்தர்கள் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.