திருக்கோவில் பிரதேச மண்டானை, குடிநிலத்தினை சேர்ந்த தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலத்தில் கல்வி கற்று கடந்த வருடம் 2014 DEC க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய செல்வன். பிரகாஸ் எனும் மாணவன். தனது விடுமுறையைக் கழிப்பதற்கு தனது நண்பர்களுடன் கடலில் குழிப்பதற்காக தம்பிலுவில் காயத்திரி அம்மன் தபோவனம் அருகாமையில் சென்ற போது கடலில் மூழ்கிப் பலியாகினார். இச்சம்பவம் இன்று சுமார் காலை 11.00 மணியளவில் இடம் பெற்றதாக தெரிய வந்தது. இதுவரை மாணவனின் சடலம் கிடைகாமையினால் கடற்படையினரின் உதவியுடம் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.