
எமது பிரதேசத்தில் சுமார் 33 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கொம்புமுறி விளையாட்டானது எமது புதியசந்ததியினரும் இதனை அறிய வேண்டும் எனும் நோக்குடன் கடந்த 2014.08.01ம் திகதி கண்ணகி கலை இலக்கிய விழாவின் 1ம் நாள் நிகழ்வின் பொது தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கண்ணகி கலை அரங்கின் முன்றலில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வின் போது எமது பிரதேச மக்கள் மாத்திரமன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
