Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

(அபிவரன்) திருக்கோவில் விநாயகபுரம் தாளையடி மீன்பிடித்துறை முகத்தை அத்துமீறி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் ஒருவர் வேலிஅமைத்ததுடன் அதன் வீதியை உடைத்து அகற்றிவருதை; கண்டித்…

Image
(அபிவரன்)
திருக்கோவில் விநாயகபுரம் தாளையடி மீன்பிடித்துறை முகத்தை அத்துமீறி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் ஒருவர் வேலிஅமைத்ததுடன் அதன் வீதியை உடைத்து அகற்றிவருதை; கண்டித்து பிரதேச மீனவர்கள் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  காலை ஈடுபட்டனர்
விநாயகபுரம் தாளையடி மீன்பிடி துறைமுகம்
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மீனவர்களால் பாவிக்கப்பட்டு வருவதுடன் அங்கு மீனவர் ஓய்வு கட்டிடம் மற்றும் ஆலயம் என்பன உள்ள நிலையில் இப் பிரதேச காணியை தமிழர் ஒருவரிடம் இருந்து பெரும்பான்மை இனத்தவர் வாங்கிய நிலையில் அவர் மீன்பித்துறைமுகம், உள்ளிட்ட பகுதிகளை அத்து மீறி வேலிஅடைத்து மீனவர்கள் துறைமுகத்திற்கு செல்லமுடியாத நிலையை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து மீனவர்கள் தமது மீன்பிடிபடகுகளை துறைமுகத்திற்கு கொண்டுவரமடியாத நிலை ஏற்பட்டதையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளர். மற்றும் மீன்பிடி அதிகாரிகளின், பொலிசார் ஆகியோர் கவத்திற்கு கொண்டுவந்த நிலையில் கடந்த மாதம் பிரதேச செயலகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட  கலந்துரையாடலையடுத்து கடல் எல்லையில் இருந்து 65 மீற்றர் வரையுள்ள இடத்துக்குள் அமைக்கப்பட்ட வேலிகளை அகற்றுமாறு காணி எல்லையை தீர்மானிக்கப்பட்டு உறுதிசெய்யும்வரை எந்தவிதமான அபிவிருத்திவேலைகளை செய்யவேண்டாம் எனவும் பொதுப் பாதையைத்திறந்து மீனவர்களின் தொழிலுக்கு ஏற்றவாறு ஒழுங்கு செய்யுமாறு காணி உரிமையாளருக்கு உத்தரவிட்ப்பட்டது
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அங்குள்ள வீதியை அகற்றுp அதனுள் தென்னங்கன்றுகளை நாட்டமுற்பட்டதையடுத்து பிரதேச செயலாளரால் தடைசெய்யப்பட்ட கடிததை;தை காட்டி அதனை நிறுத்தமுற்பட்டபோது மீனவர்களை பொலிசாரின் உதவியுடன் எச்சரிக்கப்பட்டனர்
இந் நிலையில் இவ் துறைமுகத்தை அத்துமீறி வேலி அடைத்ததை கண்டீத்து விநாயகபுரம் மட்டுப்படுத்தப்பட்ட கடற்தொழிலாளர் மீனவர் கூட்டுறவு சங்கம் மற்றும் மீனவர்கள் ஓன்றினைந்து திருக்கோவில் பிரதேச செயகத்தின் முன்னால் தமது மீன்பிடித்துறைமுகத்தை பெற்றுத்தருமாறு கோரி இன்று புதன்கிழமை காலை 10.00 மணிக்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இவ் ஆர்பாட்டத்தில் மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே மீனவர் சமூகம் வீதிக்குவருவது அரசின் விருப்பமா, கரையோரப் பாதுகாப்புக்கு அப்பால் வேலியை அகற்று, மீனவர் நிலை தெரியவில்லையா, போன்ற வாசகங்களுடன் சுலோகங்கள் ஏந்தியவாறு பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதனையடுத்து ஆர்பாட்ட இடத்திற்கு வந்த திருக்கோவில் பிரதேச சபை தவிசாளா வி.புவிராஜன், மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் இராசையா ஆகியோரிடமும்  பிரதேச செயலக பிரதம அலுவலக உத்தியோகத்தர் டி.எஸ்.ரெகான் பெரேராவிடம் மகஜர் ஒன்றினை கையளிது ஆர்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.









You may like these posts