"குடும்பம் எம்மைக் காக்கும் " என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது , ஊர்வலத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள், மற்றும் பெற்றோரும் கலந்துகொண்டனர் . ஊர்வலமானது பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டு சரஸ்வதி வித்தியாலத்தை சென்றடைந்து மீண்டும் உள் வீதிகளினுடாக பாடசாலையை வந்தடைந்தது .
இன்றைய சிறுவர் தின நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி எஸ் .தவராசா முன்பள்ளி பிரதிக் கல்வி பணிப்பாளர் தர்மபாலன் ,சுகாதார பரிசோதகர் சசிதரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.