மரண அறிவித்தல் -
அமரர். திருமதி. பிள்ளையம்மா(ஞானம்மா) செல்லப்பா (ஓய்வுபெற்ற ஆசிரியை)
தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திருமதி. பிள்ளையம்மா(ஞானம்மா) செல்லப்பா (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்கள் 2021.02.27 ம் திகதி சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் அமரர் மணிக்கன் , கனகம்மா ஆகியோரின் பாசமிகு மகளும், அமரர் மாணிக்கம், சுந்தரம், சீனியம்மா ஆகியோரின் பாசமிகு மருமகளும், அமரர் செல்லப்பா(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும் , பவானி, இந்துமதி, சிறிதரன், சாருமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும், துரைரெத்தினம், யோகேஸ்வரன், அமரர் மேகலா, யமுனா, ஜெயசுதன் ஆகியோரின் அன்பு மாமியும், ஆரணி, அனோஜன், ஆரூரன், ராகுலன், துவாரகன், அட்சரன், கௌதமன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், சங்கவி, தவேந்திரன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், றோசம்மா, அமரர் கனகசபை, அமரர் திரவியம், அமரர் தர்மலிங்கம், புவனேஸ்வரி, தவராசா ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28.02.2021 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.30 மணியளவில் இல.36 . கிருஸ்ணன் கோவில் வீதி, கல்லடியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கல்லடி உப்போடை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு ஆழ்ந்த அனுதாபத்துடன் அறியத்தருகின்றோம் .
தகவல் : குடும்பத்தினர்
தொலைபேசி:- 0777423938, 0652223770
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் .கொம் (thambiluvil.com ) இணையக்குழு சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!