திருக்கோவில் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் திருக்கோவில் முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின்போது இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது துப்பாக்கி ஒன்றும் அதற்காக பயன்படுத்தப்படும் ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.