Contact Form

Name

Email *

Message *

காடு அழித்ததாகக் கூறப்படும் 5 பெண்கள் உட்பட 31 பேர் கைது

அம்பாறை, வட்டமடு மேற்குக்கரை பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடு அழித்ததாகக் கூறப்படும் 31 பேரை அம்பாறை விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர். இவ்வாறு க…

Image
அம்பாறை, வட்டமடு மேற்குக்கரை பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடு அழித்ததாகக் கூறப்படும் 31 பேரை அம்பாறை விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 5  பெண்களும் அடங்குவதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 2 முச்சக்கரவண்டிகளையும் 2 மோட்டார் சைக்கிள்களையும் 5 கோடாரிகளையும் 15 வெட்டுக்கத்திகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட  மேற்படி 31 பேரும் திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில், மேற்படி 31 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

You may like these posts