அம்பாறை, வட்டமடு மேற்குக்கரை பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடு அழித்ததாகக் கூறப்படும் 31 பேரை அம்பாறை விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 5 பெண்களும் அடங்குவதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 2 முச்சக்கரவண்டிகளையும் 2 மோட்டார் சைக்கிள்களையும் 5 கோடாரிகளையும் 15 வெட்டுக்கத்திகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கைதுசெய்யப்பட்ட மேற்படி 31 பேரும் திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மேற்படி 31 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 5 பெண்களும் அடங்குவதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 2 முச்சக்கரவண்டிகளையும் 2 மோட்டார் சைக்கிள்களையும் 5 கோடாரிகளையும் 15 வெட்டுக்கத்திகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கைதுசெய்யப்பட்ட மேற்படி 31 பேரும் திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மேற்படி 31 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.