Contact Form

Name

Email *

Message *

ஒரு விழிப்புணர்ச்சியை கொடுக்கும் என்று நம்புகின்றோம்

முன்னாள் ஆலய வண்ணக்கர் திரு..லோகநாதன் அவர்களின் தகவல் ஒன்று தளத்தில் பார்க்க நேர்ந்தது. அது திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கடந்த மூன்றாண்டு காலமாக இவரதும…

Image
முன்னாள் ஆலய வண்ணக்கர் திரு..லோகநாதன் அவர்களின் தகவல் ஒன்று
தளத்தில் பார்க்க நேர்ந்தது. அது திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி
ஆலயத்தின் கடந்த மூன்றாண்டு காலமாக இவரதும் ,இவரது நிர்வாகத்தின்
செயல்பாடுகள் பற்றியும் , என்னென்ன வேலைகள் செய்தார்கள் என்பது பற்றியும் ஒரு தகவல் அறிக்கை மாதிரி அது இருக்கிறது. உத்தியோகபூர்வமான ஒரு வரவு செலவு அறிக்கையாக அது இல்லை.
கடந்த 18.02.2012 அன்று எமது இணையத்தளத்தில் நான் எழுதிய,
"திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலய நிர்வாகம்?" என்ற கட்டுரையை
புலத்திலும்,, நிலத்திலும் வாழும் பலர் படித்துவிட்டு, அந்தக் கட்டுரையின்
முக்கியத்துவம் குறித்தும் பேசினார்கள்..ஆனால் கோவில் நிர்வாகத்தினர்
அதைக் கண்டுகொள்ளவில்லை. இன்றுவரை மேற்படி கோவிலின் கணக்கறிக்கை முழுமையாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை.
இணையத்தளத்தின் மூலம் புலத்தில் வாழும் மக்களுக்கும் அது தெரியப்
படுத்தவில்லை..

இன்றுதான் முன்னாள் வண்ணக்கர் அவர்கள் ஓர்  அறிக்கையை வெளியிட்டுள்ளார். காலம் கடந்தாலும் அந்த அறிக்கைக்கு நன்றி..
அது ஓர் அறிக்கையாக, ஒரு பேச்சாடலாக மாத்திரமே இருக்கிறது..
உண்மையான தரவுகளுடனும்,, அத்தாட்சிகளுடனும் கூடிய ஒரு வரவு செலவு அறிக்கையாக அது இல்லை. அவர்களால் முன்னெடுக்கப்பட்ட
வேலைத்தனங்கள் என்று  ஒரு பட்டியல் போட்டிருந்தார். அதில் 10 வது
திட்டத்தில் , ஆலய சுவாமி வாகனங்கள் திருத்தி அமைக்கப்பட்டது என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் சுனாமியின் பின் பாதிக்கப்பட்ட சுவாமியின் வாகனங்கள், சூரன் ஆகியவற்றின் திருத்த வேலைக்காக நாங்கள்
திரு.ஆ . கணேசமூர்த்தி மூலம் ரூபாய் 50000,( ஐம்பதினாயிரம் ) அனுப்பி அது
திருத்தப்பட்டதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. அப்படியானால் அது எந்தக்
கணக்கில் இருக்கிறது..பதில் இருக்கிறதா?

இந்தக் கட்டுரை யாரையும் குறித்தோ,,அல்லது குறை சொல்லியோ எழுதவில்லை. மக்களுக்கு உண்மை தெரியவேண்டும் என்பதே உள்நோக்கமாகும்..
சும்மா வெறுமனே அது செய்தோம்,,இது செய்தோம் என்று அறிக்கை விடுவது சரியா? அறிக்கை யாரும் விடலாம். ஆனால் ஒரு பொதுக் கோவில்
சம்பந்தமான கணக்கறிக்கை என்பது ஆதரங்களுடன் சமர்பிக்கப் பட வேண்டும் என்பதே நியதி ஆகும்.. இம்முறை அங்கு நடந்த மகாசபை கூட்டத்தில் கூட, நிர்வாகத்தினர் "ஒரு குத்துமதிப்பாக தான் " செலவு செய்தோம் என்று சொல்லப்பட்டதாக கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மூலம்
அறியமுடிந்தது..
ஒரு குத்து மதிப்பாகத்தான் செலவு செய்தோம் , என்று பொறுப்பில்லாமல்
சொல்வது இன்றைய அறிவியல் யுகத்துக்கு எந்தவகையில் நியாம் சேர்க்கும்? இது கண்டிப்பாக ஒவ்வாத, விமர்சிக்கபட வேண்டிய விடயமே.
மட்டக்களப்பு எட்டுப்பகுதிக்கும் சொந்தமான கோவில் அது. இலங்கையில்
இருக்கின்ற திருப்படைக் கோவில்களில் முதற்படை கோவில் எமது
திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவில். இப்படியான கோவிலை
நிர்வகிக்கின்றவர்கள்  எவ்வளவு பொறுப்பும், கடமையுணர்வும் மிக்கவர்களாக
இருக்க வேண்டும். இதை ஏன் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

இனிவருங்காலங்கள் இளையோர் கைகளில் என்பதை புதிய நிர்வாகத்தினர்
புரிந்து கொள்ளவேண்டும்.. இனி அவர்கள் அக்கறையுடனும், ஆதாரத்துடனும்
வரவு,,செலவு கணக்கு கேட்பார்கள். ஊரவரும் இனி விழிப்பாக இருப்பார்கள்
என்று புலத்தில் வாழும் நாங்கள் நம்புகின்றோம்..

இந்தக் கட்டுரை புதிய நிர்வாகப் பொறுப்பை எடுத்துள்ள அனைவருக்கும்
ஒரு விழிப்புணர்ச்சியை கொடுக்கும் என்று நம்புகின்றோம்

You may like these posts