News By .க.ஜெயசேகர் (கண்ணன்).
அம்பாரை மாவட்ட பிரதேச மக்களின் சுகாதார நிலையினை உயர்த்துவதற்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர திரு. நாமல் ராஜபக்ச அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய 3 வது இராணுவ படையணியின் பொறுப்பதிகாரி திரு. கரன் பெரேரா அவர்களின் அனுசரனையுடன் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (23.06.2012) காலை 9.00 மணியளவில் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு. எம்.கோபாலரெத்தினம் அவர்களின் நிர்வகிப்புக்கு அமைவாக வருகை தந்த வலயக் கல்வி பணிப்பாளர் மற்றும் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி எம். தமிழ்தாசன் உட்பட அனைவரும் கலந்து மாபெரும் நடமாடும் வைத்திய வேவையினை மிகவும் சிறப்புற நடாத்தினர்.