தம்பிலுவில் பிரதேசத்தில் இராணுவ வாகனமொன்று மோதியதால் 14 வயதான பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளார்
தம்பிலுவில் ஏ.பி.சி. சந்திக்கு அருகில் மேற்படி மாணவன் கல்வி சுற்றுலா சென்று தனது வீட்டிற்கு செல்வதற்கு பஸ்ஸில் இறங்கி வீதியை கடக்க முயன்ற வேளையில் இராணுவ பிக்அப் வாகனமொன்று மோதியுள்ளது.
திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு இச்சிறுவன் கொண்டு செல்லப்பட்டபோது அவன் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 14 வயதான நாதன் சரண் எனும் மாணவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலையேற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தால் ஊரே சோகமாக காணப்படுகிறது
தம்பிலுவில் ஏ.பி.சி. சந்திக்கு அருகில் மேற்படி மாணவன் கல்வி சுற்றுலா சென்று தனது வீட்டிற்கு செல்வதற்கு பஸ்ஸில் இறங்கி வீதியை கடக்க முயன்ற வேளையில் இராணுவ பிக்அப் வாகனமொன்று மோதியுள்ளது.
திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு இச்சிறுவன் கொண்டு செல்லப்பட்டபோது அவன் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 14 வயதான நாதன் சரண் எனும் மாணவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலையேற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தால் ஊரே சோகமாக காணப்படுகிறது