News By .க.ஜெயசேகர் (கண்ணன்)
ஈழத்தில் செந்தூர் என்று அழைக்கப்படும் திருக்கோவில் ஆலயத்தின் வருடார்ந்த மகாசபை தெரிவுக் கூட்டமானது இன்று (17.06.2012) காலை 10.00 மணியளவில் ஆலய தலைவர் ஆ.பிரசாந்த் அவர்களின் தலைமையில் ஆலய மண்டபத்தினுள் ஆரம்பமாகியது. இக் கூட்டத்திற்கு கல்முனை பாண்டிருப்பு தொடக்கம் பொத்துவில் வரை உள்ளடக்கப்படும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இப் புதிய மகாசபை தெரிதல் ஆரம்பத்தில் கடந்த காலத்தின் வரவு. செலவு கணக்கறிக்கை ஆராயப்பட்ட பின்பு ஆலய நிர்வாகத் தெரிவு ஆரம்பமானது. அத் தெரி;வில் பலவருடங்களாக சிறந்த தலைவராக செயலாற்றிய பாண்டிருப்பைச் சேர்ந்த ஆ.பிரசாந்த் அவர்களையும் ஆலய கௌரவ வண்ணக்கராக வை.ரெகுராமமுர்த்தி அவர்களையும் செயலாளர் திருக்கோவிலைச் சேர்ந்த ம.நிசாந்தன் அவர்களையும் பொருளாளராக தம்பிலுவிலைச் சேர்ந்த ஆ.சிவானந்தமூர்த்தி அவர்களையும் ஏனைய பிரதேச ரீதியாக ஒவ்வொரு பிரதிநிதிகள் ஊடாக புதிய மகாசபை தெரிவு செய்யப்பட்டது. இதனையிட்ட இவ்வாண்டு உற்சவம் சிறப்புற நடைபெறும் என்பதையும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.திருக்கோவில் ஆலய புதிய மகாசபை தெரிவு
News By .க.ஜெயசேகர் (கண்ணன்) ஈழத்தில் செந்தூர் என்று அழைக்கப்படும் திருக்கோவில் ஆலயத்தின் வருடார்ந்த மகாசபை தெரிவுக் கூட்டமானது இன்று (17.06.2012) காலை 10.00 மணியளவில் ஆலய…