Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அருகில் வீதிவிபத்தில் ஒருவர் படுகாயம்

தம்பிலுவில் இன்று வியாழக்கிழமை காலை மோட்டார் சைக்கிளும்; பஸ்வண்டியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற வீதிவிபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய தாதி உத்தியோகத்தர் படுகாயமடைந…

Image
 
தம்பிலுவில் இன்று வியாழக்கிழமை காலை மோட்டார் சைக்கிளும்; பஸ்வண்டியும் நேருக்கு நேர் மோதி
இடம்பெற்ற வீதிவிபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய தாதி
உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்

தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதி வளைவில் சம்பவதினமான இன்று காலை 7.30 மணிக்கு அக்கரைப்பற்றில் இருந்து திருக்கோவிலுக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்வண்டியும் தம்பிலுவிலில் இருந்நு அக்கரைப்பற்றுக்கு சென்ற மோட்டடர்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது
இதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய தம்பிலுவில் பிரதேசத்தை சேர்ந்த தாதி உத்தியோகத்தர் நல்லதம்பி பிரதீபன் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்றுஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இத தொடர்பான விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
---

You may like these posts

Comments