தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் 1958 இல் கனஷ்ட பாடசாலையாக தம்பிலுவில் 2ம் குறிச்சியில் நிறுவப்பட்டது. இது ஆரம்பத்தில் தம்பிலுவில் 1ம் குறிச்சியில் கிறிஸ்தவ ஆண்கள் பாடசாலையாகவும், 2ம் குறிச்சியில் கிறிஸ்தவ பெண்கள் பாடசாலையாகவும் இயங்கிவந்தது. இவ்விரு பாடசாலைகளிலிருந்தும் சைவப் பிள்ளைகள் வந்து சேர்ந்தே இன்றைய இப்பாடசாலை சைவப் பாடசாலையாகத் தோற்றம் பெற்றது.
இப்பாடசாலை இரண்டு சாதாரண கட்டடங்களுடனும் ஓலைக் கொட்டிலொன்றுடனும் 200 மாணவர்களையும் 4 ஆசிரி யர்களையும் தன்னகத்தே கொண்டு தம்பிலுவில் மகா வித்தியாலயம் என்னும் பெயருடன் விளங்கியது. தற்போது மஹிந்த சிந்தனை புனர்வாழ்வு வேலைத் திட்டத்தின் கீழ் சிறந்த 1000 இடைநிலைப் பாடசாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் கல்லூரியாக மாற்றமுற்று வருகிறது.
பிரதேசத்தின் பிரதேச சபை, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் வழிகாட்டலுடன் மாகாண சபை உட்பட கல்வி அமைச்சினதும் விசேட அவதானிப்பின் கீழ் தற்போது இலங்கையில் அபிவி ருத்தியடைந்த சிறந்த இடைநிலைப் பாடசாலைகள் ஆயிரத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் வேலைத்திட்டத்தில் இன்று இப்பாடசாலையில் கல்வி கற்கும் 1550 மாணவர்களுக்கும், எதிர்கால மாணவர்களுக்குமான ஏராளமான மானிட, பௌதீக வளங்களைப் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. நவீன உயர்தர விஞ்ஞான ஆய்வுகூடம், நிர்வாக அலகுடன் கூடிய பாடசாலையின் ஏனைய கட்டிடத் தொகுதிகள், பௌதீக வளங்கள் என்பனவற்றைக் கல்வி அமைச்சின் அறிவுசார் சமூகத்திற்கான கல்விச் செயற்றிட்டம் மூலமாக ரூபா 40 மில்லியன் முதலீடு செய்து சமூகத்திற்கு பொருத்தமான, நற்பிரசையை உருவாக்கும் பெரும் பணிக்கு உதவும் வகையில் கிழக்கு மாகாண சபைக்கு இப்பணி கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கல்வி அமைச்சினால் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்திற்கு வழங்கப்பட்ட பௌதீக வளங்கள், கல்வி அபிவிருத்திக்கான பங்களிப்பு, ஆசிரியர் பயிற்சிகள் என்பனவற்றின் பிரதிபலனாக க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 10 "ஏ" சித்திகளைப் பெற்றும் க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் வைத்தியத் துறைகள், பொறியியற் துறைகள், கலைத்துறைகள், வர்த்தகத் துறைகள் முதலானவற்றில் மாணவர்கள் தோற்றி 100 க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழகம் சென்றுள்ளமை பாடசாலையின் வெற்றிப் பாதையை தெளிவாகக் காட்டுகிறது. இவ்வகையில் வைத்தியர்கள், பொறியிய லாளர்கள், சட்டத்தரணிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், புத்திஜPவிகள் எனப் பெரும்பாலானோரை உருவாக்கிய பெருமைக்கு கல்வி அமைச்சு உட்பட சகல தரப்பினரும் காற்கோளாய் அமைந்துள்ளனர்.
தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களது திறமைகளின் சான்றாக கல்வி, கலை, கலாசாரப் போட்டிகளில் அகில இலங்கை மட்டத்தில் பல வெற்றிகளை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்னும் பாடசாலை சாரணர் இயக்கம் ஏனைய பாடசாலைகளோடு சம அந்தஸ்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், ஆங்கில மொழி மூலமாக பல சஞ்சிகைகளை வெளியிட்டு அருமையான கல்விப் பணியையும் இப்பாடசாலை ஆற்றி வருகிறது.
அரச சார்பற்ற நிறுவனங்களினது உதவிகளைப் பெற்று அபிவிருத்திப் பணியினை உயர் நிலைக்கு இட்டுச் செல்லவும் அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேசத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து அளப்பரிய சேவை செய்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.
மஹிந்த சிந்தனையின் நோக்கினைப் பொருளுள்ளதாக்க கல்வி அமைச்சினதும், பாராளுமன்ற, பிர தேச, மாகாண அமைச்சர்களினதும், உறுப்பினர்களினதும், பிரதேச நலன்விரும்பிகளினதும் ஒத்துழைப்புடன் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்கு சிறந்த இடைநிலைப் பாடசாலைகள் 1000 ஐ கையளிக்கும் பயணத்தின் ஒரு நிறுத்தமாக இது அமைகிறது. கல்விப் பணி எதிர்வரும் காலங்களில் ஆல் போல் வேரூன்றி அறுகுபோல் படர்ந்து சிறக்கவே எம் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
இப்பாடசாலை இரண்டு சாதாரண கட்டடங்களுடனும் ஓலைக் கொட்டிலொன்றுடனும் 200 மாணவர்களையும் 4 ஆசிரி யர்களையும் தன்னகத்தே கொண்டு தம்பிலுவில் மகா வித்தியாலயம் என்னும் பெயருடன் விளங்கியது. தற்போது மஹிந்த சிந்தனை புனர்வாழ்வு வேலைத் திட்டத்தின் கீழ் சிறந்த 1000 இடைநிலைப் பாடசாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் கல்லூரியாக மாற்றமுற்று வருகிறது.
பிரதேசத்தின் பிரதேச சபை, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் வழிகாட்டலுடன் மாகாண சபை உட்பட கல்வி அமைச்சினதும் விசேட அவதானிப்பின் கீழ் தற்போது இலங்கையில் அபிவி ருத்தியடைந்த சிறந்த இடைநிலைப் பாடசாலைகள் ஆயிரத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் வேலைத்திட்டத்தில் இன்று இப்பாடசாலையில் கல்வி கற்கும் 1550 மாணவர்களுக்கும், எதிர்கால மாணவர்களுக்குமான ஏராளமான மானிட, பௌதீக வளங்களைப் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. நவீன உயர்தர விஞ்ஞான ஆய்வுகூடம், நிர்வாக அலகுடன் கூடிய பாடசாலையின் ஏனைய கட்டிடத் தொகுதிகள், பௌதீக வளங்கள் என்பனவற்றைக் கல்வி அமைச்சின் அறிவுசார் சமூகத்திற்கான கல்விச் செயற்றிட்டம் மூலமாக ரூபா 40 மில்லியன் முதலீடு செய்து சமூகத்திற்கு பொருத்தமான, நற்பிரசையை உருவாக்கும் பெரும் பணிக்கு உதவும் வகையில் கிழக்கு மாகாண சபைக்கு இப்பணி கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கல்வி அமைச்சினால் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்திற்கு வழங்கப்பட்ட பௌதீக வளங்கள், கல்வி அபிவிருத்திக்கான பங்களிப்பு, ஆசிரியர் பயிற்சிகள் என்பனவற்றின் பிரதிபலனாக க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 10 "ஏ" சித்திகளைப் பெற்றும் க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் வைத்தியத் துறைகள், பொறியியற் துறைகள், கலைத்துறைகள், வர்த்தகத் துறைகள் முதலானவற்றில் மாணவர்கள் தோற்றி 100 க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழகம் சென்றுள்ளமை பாடசாலையின் வெற்றிப் பாதையை தெளிவாகக் காட்டுகிறது. இவ்வகையில் வைத்தியர்கள், பொறியிய லாளர்கள், சட்டத்தரணிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், புத்திஜPவிகள் எனப் பெரும்பாலானோரை உருவாக்கிய பெருமைக்கு கல்வி அமைச்சு உட்பட சகல தரப்பினரும் காற்கோளாய் அமைந்துள்ளனர்.
தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களது திறமைகளின் சான்றாக கல்வி, கலை, கலாசாரப் போட்டிகளில் அகில இலங்கை மட்டத்தில் பல வெற்றிகளை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்னும் பாடசாலை சாரணர் இயக்கம் ஏனைய பாடசாலைகளோடு சம அந்தஸ்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், ஆங்கில மொழி மூலமாக பல சஞ்சிகைகளை வெளியிட்டு அருமையான கல்விப் பணியையும் இப்பாடசாலை ஆற்றி வருகிறது.
அரச சார்பற்ற நிறுவனங்களினது உதவிகளைப் பெற்று அபிவிருத்திப் பணியினை உயர் நிலைக்கு இட்டுச் செல்லவும் அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேசத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து அளப்பரிய சேவை செய்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.
மஹிந்த சிந்தனையின் நோக்கினைப் பொருளுள்ளதாக்க கல்வி அமைச்சினதும், பாராளுமன்ற, பிர தேச, மாகாண அமைச்சர்களினதும், உறுப்பினர்களினதும், பிரதேச நலன்விரும்பிகளினதும் ஒத்துழைப்புடன் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்கு சிறந்த இடைநிலைப் பாடசாலைகள் 1000 ஐ கையளிக்கும் பயணத்தின் ஒரு நிறுத்தமாக இது அமைகிறது. கல்விப் பணி எதிர்வரும் காலங்களில் ஆல் போல் வேரூன்றி அறுகுபோல் படர்ந்து சிறக்கவே எம் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
---
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!