Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவிலை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை லொறி மோதியதில் பரிதாப மரணம்

கிளிநொச்சி மாவட்டம் கொக்காவில் பகுதியில் ஏ9 நெடுஞ்சாலை அமைக்கும் சீன நிறுவனத்தில் கடமையாற்றிய தம்பிலுவிலை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடமை நேரத்தின்போது லொறி மோதியதில் மரணமட…

Image
கிளிநொச்சி மாவட்டம் கொக்காவில் பகுதியில் ஏ9 நெடுஞ்சாலை அமைக்கும் சீன நிறுவனத்தில் கடமையாற்றிய தம்பிலுவிலை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடமை நேரத்தின்போது லொறி மோதியதில் மரணமடைந்துள்ளார்.
 இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராமநாதன் விஜயராஜ் (35 வயது) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு வேலைத்தள விபத்தில் உயிரிழந்தவராவார்.

மேற்படி நபர் கேற்ரிக் பகுதி 2 (Gatic – section 2) என்ற சீன நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் ஏ9 நெடுஞ்சாலை அமைக்கும் வேலைத்திட்டத்தில் மேற்பார்வையாளராகக் கடமையாற்றுகின்றார்.

சம்பவ தினம் காலை 11 மணியளவில் (03.08.2011) கொக்காவில் என்ற இடத்தில் உட்காந்துகொண்டு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அதே கம்பனிக்கு கிறவல் கொண்டுவந்த லொறி பின்புறமாக வந்து அவர்மீது ஏறியதில் படுகாயமடைந்து கிளிநொச்சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி பின் உயிரிழந்துள்ளார்.

சீன நாட்டுக் கம்பனிகள் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது தங்களது லாபமே நோக்காகக் கொண்டு செயற்படுவதால் விபத்துக்கள் அதிகளவாக ஏற்படுவதும் அதனால் ஊழியர்கள் இறப்பதும் தற்போது சாதாரண விடயமாகி விட்டது.

எமது ஊர் மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள் .
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் .

You may like these posts

Comments