திருக்கோவில் பிரதேச சபையின் செயற்பாட்டில் பிரதேச மக்கள் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளனர். ஆகக் குறைந்துது பிரதேசத்தில் உள்ள தெருக்கள், மற்றும் வைத்தியாசாலைச் சூழல் என்பன கூட சுத்தம் செய்யப்படாமல் காணப்படுகின்றது. இதனால் பிரதேசத்தில் மிகவும் துர்நாற்றம் வீசுவதுடன் பல தொற்று நோய்களும் உருவாகி வருகின்றது. இவ்விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கூறப்பட்டும் நடவடிக்கைள் ஏதும் எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே இவற்றை இலகுவாக உணர்த்தும் நோக்குடன் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி உட்பட தாதிமார்கள் சிற்றூளியர்கள் அனைவரும் வைத்தியசாலைச் சுற்றாடலைச் சுத்தம் செய்து குப்பை கூழங்களை அள்ளிக்கொண்டு கிழக்கு மகாணசபை உறுப்பினர் எஸ்.செல்வராஜா அவர்களின் காரியாலயத்துக்கு முன்பால் கொட்டி இருப்பதை படத்தில் காணலாம்.
நன்றி - இலங்கை நெட்

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!