மரண அறிவித்தல் -
அமரர். மார்க்கண்டு ஈஸ்வரானந்தம்
மலர்வு -1951.09.07 உதிர்வு - 2020.12.10
தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு ஈஸ்வரானந்தம் அவர்கள் 10.12.2020 ஆம் திகதி இறைபதமெய்தினார். அன்னார் அமரத்துவமடைந்த திரு.திருமதி . மார்க்கண்டு தங்கப்பொன் தம்பதியினரின் மகனும் திருமதி . யோகேஸ்வரி ஈஸ்வரானந்தத்தின் கணவனும் இறைவனடி சேர்ந்தவர்களான திரு.திருமதி . சபாரெத்தினம் நாகமணி தம்பதியினரின் மருமகனும் மகேஸ்வரி , இறைபதமெய்திய குணரெத்தினம் ஆகியோரின் சகோதரனும் காலம் சென்ற கந்தசாமி, கிருபைரெத்தினம் என்பவர்களது மைத்துணருமாவார்.
இவர் சுரேஸ் ( பிரான்ஸ் ) சங்கீதா , அனிதா , பாமினி ஆகியோரின் தந்தையும் சசிகரன் , துஷ்யந்தி ( பிரான்ஸ் ) கோபிநாத் , யுகசீலன் என்பவர்களது மாமனாரும் ஜெகதீஸ்வரி , நமசிவாயம் , விஜயேஸ்வரி , சுந்தரேஸ்வரி ஆகியோரின் அத்தானும் நாதன் , விஜிதகுமாரி , ரவீந்திரன் , இறைபதமெய்திய ஜெகநாதன் என்பவர்களது உடன்பிறவா சகோதரனும் விகாஸ் , தேஜஸ் , கோவர்த்தனி , ஐஜஸ்வின் , றஸ்பிகரி ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார் . அன்னாரின் பூதவுடலுக்கான அந்திமக்கால கிரியைகள் யாவும் அவரது இல்லத்தில் | 11.12.2020 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு நிறைவுற்றதும் தம்பிலுவில் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார் , உறவினர் யாவருக்கும் அறியத் தருகின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
V.C வீதி, தம்பிலுவில் - 01,
0779230682
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் .கொம் (thambiluvil.com ) இணையக்குழு சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!