மரண அறிவித்தல் -
அமரர். திருமதி. இலெட்சுமிப்பிள்ளை இராசையா
தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திருமதி. இலெட்சுமிப்பிள்ளை இராசையா
அவர்கள் 2017.10.26 திகதி நேற்று காலமானார்.
அமரர். திருமதி. இலெட்சுமிப்பிள்ளை இராசையா
தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திருமதி. இலெட்சுமிப்பிள்ளை இராசையா
அவர்கள் 2017.10.26 திகதி நேற்று காலமானார்.
மலர்வு -1942.07.08 உதிர்வு - 2017.10.26
அன்னார் காலஞ்சென்றவர்களான குஞ்சித்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாணிக்கம் இராசையா அவர்களின் அன்பு மனைவியும், சுந்தரமூர்த்தி, கணபதிப்பிள்ளை, மார்க்கண்டு ஆகியோரின் அன்பு சகோதரியும், புஸ்பராணி, கருணாகரன்,சந்திரசேகரன், மனோகரன், உமாதேவி, மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும், பத்மராசா, திலகவதி, தாமரலோஜினி, ராசமலர், சத்தியமணி, பால்ராஜ், தட்சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல், அவரது இல்லத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று தம்பிலுவில் இந்து மயானத்தில் 2017.10.29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!