Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் உதைபந்தாட்ட போட்டியின் இறுதிச்சுற்றுப்போட்டி

தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இல்லங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியின்  முதலாவது போட்டி கடந்த 2017.01.23 திங்கள்கிழம…

Image
தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இல்லங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியின்  முதலாவது போட்டி கடந்த 2017.01.23 திங்கள்கிழமை  இடம்பெற்றது. இதில்  இளங்கோ இல்லம் வெற்றி பெற்றது. காலநிலை சீர்கேடு மழை காரணமாக இரண்டாவது போட்டி இடம்பெறவில்லை.


25.01.2017  புதன்கிழமை இன்று இறுதிச்சுற்றுப்போட்டியில் இடம்பெற்றது . போட்டியினை மத்திய கல்லூரியின் அதிபர் திரு.வ.ஜயந்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இப்போட்டி மிகவும் விறுவிறுப்பான முறையில் நடைபெற்றது. போட்டியின் முதல் சுற்றில் கம்பர் இல்லம் ஆரம்பத்தில் ௦1 கொல்களினையும் இளங்கோ இல்லம் எதுவித கொல்களினையும் போடவில்லை இருப்பினும் இரண்டாம் சுற்றின் ஆரம்பத்தில் இளங்கோ இல்லத்தினர் 02 கோல்களினை தொடர்ச்சியாக பெற்றனர். பின்னர் கம்பர் மற்றும் இளங்கோ இல்லத்தினர் கொல்களினையும் போட்டனர். பின்னர் இறுதியாக கம்பர் இல்லத்தினர் மேலும் 01 கொல்களினை பெற்று  4 : 3 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் அடிப்படியில் உதைபந்தாட்ட போட்டியில் 1ம் இடத்தினை கம்பர் இல்லமும், 2ம் இடத்தினை இளங்கோ இல்லமும்,  3ம் இடத்தினை வள்ளுவர் இல்லமும் பெற்றுக்கொண்டன.

















You may like these posts

Comments