தம்பிலுவில் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்கத்தினரின் ஏற்பாட்டில் 2016 இவ்வாண்டின் இறுதி ஒன்றுகூடலும் மற்றும் இரவு நேர விருந்துபசாரமும் நிகழ்வானது தம்பிலுவில் மத்திய கல்லூரியின் ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று மாலை பழைய மாணவர்சங்கத்தின் தலைவர் திரு. எஸ்.சுகிர்தரன் தலைமையில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், கிழக்கு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்கடர்.கே.முருகானந்தம், கிழக்கு மாகாண நீர்பாசன பொறியியலாளர் திரு.எஸ்.திலகராஜா மற்றும் தேசிய பாடசாலையின் அதிபர் திரு.V.ஜெயந்தன் அவர்களும், பழைய மாணவர்சங்கத்தின் உப தலைவர் பி.பாலேந்திரகுமார், செயலாளர் ஆர்.ரதீசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் . இந்நிகழ்வில் 2017ம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களும் சவால்கள் தொடர்பான அனுபவரீதியான கலந்துரயாடல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



























Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!