பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோமாரிப் பகுதியில் 14.12.2016 புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார் திருக்கோவில் 3ஆம் பிரிவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான சோமநாதன் சிவரஞ்சன் (வயது 27) என்பவரே இவ்விபத்தில் பலியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவிலிலிருந்து பொத்துவில், றொட்டைக் கிராமத்தில் வசிக்கும் தனது தாயிடம் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோதே இவ்விபத்துச் சம்பவித்தது. இவரது மோட்டார் சைக்கிளும் சிறிய லொறி ஒன்றும் நேருக்குநேர் மோதியதாகவும் பொலிஸார் கூறினர்.
திருக்கோவிலிலிருந்து பொத்துவில், றொட்டைக் கிராமத்தில் வசிக்கும் தனது தாயிடம் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோதே இவ்விபத்துச் சம்பவித்தது. இவரது மோட்டார் சைக்கிளும் சிறிய லொறி ஒன்றும் நேருக்குநேர் மோதியதாகவும் பொலிஸார் கூறினர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!