Contact Form

Name

Email *

Message *

ஐஸ் தண்ணீர் குடிப்­பதால் உடலில் ஏற்­படும் பாதிப்­புகள்

தாகத்தைத் தணிப்­ப­தற்கு குளிர்ச்­சி­யான நீரைத் தான் பருக விரும்­புவோம். எப்­போதும் குளிர்ச்­சி­யான நீரைப் பரு­கினால், உட­லினுள் பல பிரச்­ச­ினைகள் ஏற்­படும். ஐஸ் தண்ணீர்…

Image
தாகத்தைத் தணிப்­ப­தற்கு குளிர்ச்­சி­யான நீரைத் தான் பருக விரும்­புவோம். எப்­போதும் குளிர்ச்­சி­யான நீரைப் பரு­கினால், உட­லினுள் பல பிரச்­ச­ினைகள் ஏற்­படும்.
ஐஸ் தண்ணீர் குடிப்­பதால் உடலில் ஏற்­படும் பாதிப்­புகள்
கோடைக்­காலம் ஆரம்­பித்து விட்ட நிலையில் பலரும் தாகத்தைத் தணிப்­ப­தற்கு குளிர்ச்­சி­யான நீரைத் தான் பருக விரும்­புவோம். அதிலும் வெளியே வெயிலில் சுற்றித் திரிந்து வீட்­டிற்கு வந்­ததும், ஃப்ரிட்ஜில் உள்ள நீரை அப்­ப­டியே எடுத்து பரு­குவோம். இது வெயிலில் இருந்து தற்­கா­லி­க­மாக நல்ல நிவா­ர­ணத்தைத் தரலாம்.
ஆனால் இப்­ப­டியே எப்­போதும் குளிர்ச்­சி­யான நீரைப் பரு­கினால், அதனால் உட­லினுள் பல பிரச்­ச­ினைகள் தான் ஏற்­படும். பின் நாள்­பட்ட உடல் உபா­தை­களால் மிகுந்த அவஸ்­தைக்­குள்­ளா­கக்­கூடும். இங்கு ஐஸ் தண்­ணீரைக் குடிப்­பதால் சந்­திக்கும் பிரச்­ச­ினைகள் என்­ன­வென்று தெரிந்து கொள்­ளுங்கள்.
* ஐஸ் தண்­ணீரைக் குடிப்­பதால், உண­வுகள் செரி­மா­ன­மா­வதில் இடை­யூறு ஏற்­படும். எப்­ப­டி­யெனில் குளிர்ச்­சி­யான நீரைப் பருகும் போது இரத்த நாளங்கள் சுருங்கும். இதன் கார­ண­மாக செரி­மான செயல்­பாடு தாம­த­மாக்­கப்­ப­டு­வ­தோடு, உண­வு­களும் முறை­யாக செரி­மா­ன­மா­காமல் இருக்கும். இதனால் உண­வு­களில் உள்ள முழு­மை­யான சத்­துக்­களைப் பெற முடி­யாமல் போய்­விடும்.
* நம் உடலின் சரா­சரி வெப்­ப­நிலை 37 டிகிரி செல்­சியஸ். ஆனால் இதற்கு குறை­வான வெப்­ப­நி­லையில் எதை­யேனும் பரு­கினால், அந்த வெப்­ப­நி­லைக்கு உடலை சீராக்க ஆற்றல் தேவைப்­படும். இப்­படி ஆற்­ற­லா­னது உண்ணும் உணவை செரிக்க பயன்­ப­டாமல், உடல் வெப்­ப­நி­லையை சீராக்க பயன்­ப­டுத்­தினால், உண­வு­களில் உள்ள சத்­துக்கள் உறிஞ்ச முடி­யாமல், நாள­டைவில் இதன் கார­ண­மா­கவே ஊட்­டச்­சத்து குறை­பாடு ஏற்­படும்.
* குளிர்ச்­சி­யான நீரைப் பருகும் போது, சுவாசப் பாதையை பாது­காக்கும் பட­ல­மான சீதச்­சவ்வு பாதிப்­பிற்­குள்­ளாகும். இப்­படி ஐஸ் தண்­ணீரை தினமும் அதிகம் குடித்து வந்தால், அந்த சவ்வு மிகு­தி­யாக பாதிக்­கப்­பட்டு, அதனால் எளிதில் நோய்த்­தொற்­றுக்கள் ஏற்­பட்டு, தொண்­டையில் புண் உரு­வாகும்.
* ஐஸ் தண்­ணீரைப் பரு­கினால், இத­யத்­து­டிப்பு குறைய ஆரம்­பிக்கும் ஆய்­வு­க­ளிலும், ஐஸ் தண்­ணீரைக் குடித்தால், சஞ்­சாரி நரம்பு தூண்­டப்­படும். இந்த நரம்­பா­னது மண்­டை­யோட்டின் 10 ஆவது நரம்பு மற்றும் இது உடலின் தன்­னாட்சி நரம்பு மண்­டலம். இந்த நரம்பு தான் உடலின் தன்­னிச்­சை­யற்ற செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­கி­றது. குளிர்ச்­சி­யான நீரைப் பருகும் போது இந்த நரம்பு இதயத்துடிப்பை குறையச் செய்யும்.
* குளிர்ச்சியான நீரை அதிகம் பருகினால், உடலினுள் உள்ள திசுக்களும், இரத்த நாளங்களும் அழுத்தத்திற்கு உள்ளாகி, பல பிரச்சினைகளை உண்டாக்கும்

You may like these posts

Comments