அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இரகசியமாக ஊழல் மோசடிகளில் ஈடுபட்டாலும் அது மக்களுக்குத் தெரிய வரும். எமது ஆட்சியில் மக்கள் எதிர்பார்ப்பது ஊழல் மோசடிகள் அற்ற நல்லாட்சியாகும். அதேபோன்று, சுதந்திரம் ஜனநாயகம் என்பவற்றை உறுதிப்படுத்துவது தொடர்பில் பொதுமக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
ஆகவே, நானும் பிரதமரும் ஒன்றிணைந்து ஸ்தாபிக்கும் பொதுக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே அமைச்சர்களினால் நியமனங்கள் வழங்க முடியும். இந்தக் குழுவிற்கு அமைச்சர்களால் கோரிக்கைகளை முன்வைக்க முடியும். அமைச்சர்களின் இணக்கப்பாட்டுடன் தகுதியானவர்கள் அந்தந்த நிறுவனங்களில் தலைவர்களாக நியமிக்கப்படுவர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!