Contact Form

Name

Email *

Message *

மண்டூர் கந்தனின் தீர்த்தோற்சவம் ! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

மட்டக்களப்பு பிரதேச நீண்ட பாரம்ரிய வழிபாட்டு முறைகளையும் அதனோடு கூடிய பண்பாட்டுக்கோலஙகளையும் இயற்கையோடியைந்த இறைவழிபாட்டினையும் மெருகு குறையாது இன்னும் கட்டிக்காக்கின்ற பெரு…

Image
 மட்டக்களப்பு பிரதேச நீண்ட பாரம்ரிய வழிபாட்டு முறைகளையும் அதனோடு கூடிய பண்பாட்டுக்கோலஙகளையும் இயற்கையோடியைந்த இறைவழிபாட்டினையும் மெருகு குறையாது இன்னும் கட்டிக்காக்கின்ற பெருமை மண்டூர் ஆலயத்திற்கே உண்டு.

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 30 கிலோமீற்றர் தூரத்தில் இயற்கை அழகு செறிந்த மண்டூர்.அமைந்துள்ளது தில்லை மரங்கள் அடந்த காட்டில் இளந்தென்றல் மெய்லென வீசும் அமைதியான சூழலிலே தானாக அடியார்களுக்கு அருள்பாலிப்பதற்காக வந்துதித்த ஒளி வீசும் வேலாயுதமாகும் முருகப்பெருமானார்  சூரபத்மனைத் சங்கரித்த வேலாயுதத்தில் பிறந்த மூன்று ஒளிப்பிளம்புகளில் ஒன்று உகந்தமலையிலும்.இன்னொன்று திருக்கோவில் வெள்ளைநாவல் மரமொன்றிலும் மற்றையது மண்டூர் தில்லைமரத்திலும் வேல்களாக உதித்து காட்சி கொடுத்தன.என்பது கர்ண பரம்பரையின் ஐதீகக் கதை

தில்லை மண்டூர் ஆலயத்தின் வருடாந்த  உற்சவமானது மிகவும் விமரிசையாக ஆகஸ்ட் மாதம் 9ந் திகதி ஞாயிறு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 20 நாட்கள் எம்பெருமானின் திருவிழா நடைபெற்றது ஆகஸ்ட் மாதம்  29ந் திகதி சனிக்கிழமை இன்று காலை 9.00 மணியளவில் கலியுக கந்தன் புஷ்பக வாகனத்தில் அமர்ந்து ஆலயத்திலிருந்து தீர்த்த உற்சவத்திற்கு தீர்த்தக்கரையை நோக்கி புறப்பட்டார்

சபாமண்டபத்தில் அமந்த திருமுருகன் பூசையின் பின்னர் மாணிக்க கங்கையிலிருந்து பிரிந்து வரும் ஒரு கிளையானது மூங்கிலாற்றுடன் கலந்து மட்டக்களப்பு வாவியில் சங்கமமாகும் திருந்தீர்த்தத்தில் முருகனுடன் அடியார்கள் தீர்த்தமாடும் கண்கொள்ளா காட்சி பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்களை மெய்மறக்கச் செய்யும் அன்றைய தினம்

தீர்த்த உற்சவத்தை தொடர்ந்து முருகப்பெருமான் புஷ்பக வாகனத்தில் அமர்ந்தவாறு ஆலயத்தை நேக்கி புறப்படுவார் ஆலய வளாகத்தை நெருங்கியதும் தெய்வானை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக முருகப்பெருமானுக்கு 21 நாட்கள் தீபமெடுத்த சிறுமிகளும் வில்-அம்புடன் சென்ற முருகடியார் சிறுவனும் மயக்கமுற அவர்களை கையிலேந்தியவாறு  வள்ளியம்மன் ஆலயத்தினுள் கொண்டு சென்று அங்கே பெரிய கப்புகனாரால் விபூதி,தீர்த்தம் வீசியபின்னர் சற்று நேரத்தின் பின்னர் மயக்கம் தெளிந்து எழும் நிலை  அடியார்கள் அனைவரையும் மயிர்க்கூச்சறிய செய்யும் நிகழ்வாகவே இருந்தது.

இன்றைய தீர்த்தோற்சவத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு நாட்டில் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் தங்களின் நேர்கடன்களை நிpறைவேற்றினர் இன்று.










You may like these posts

Comments