Contact Form

Name

Email *

Message *

நாளை திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம் ஆரம்பம்

திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுதசுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவமும் தீர்த்தோற்சவமும் நாளை 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. பொத்துவில், கோமாரி, தாண்டி…

Image
திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுதசுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவமும் தீர்த்தோற்சவமும் நாளை 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. பொத்துவில், கோமாரி, தாண்டியடி, விநாயகபுரம் திருக்கோவில் தம்பிலுவில் தம்பட்டை, கோளாவில், பனங்காடு, நாவற்காடு, அக்கரைப்பற்று, கண் ணகிபுரம், காரைதீவு, கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நற்பிட்டி முனை, சேனைக்குடியிருப்பு ஆகிய 18 ஊர்கள் இவ்வாலயத்தில் அங்கம்வகிக் கின்றன. ஆடி அமாவாசை உற்சவம் ஆலயத்தின் ஆடி அமாவாசை உற்சவம் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் நாளை 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. நாளை நீர்த்தாங்கி திறப்பு நிகழ்வு அடியார்களுக்கு சீரான குடிநீர் வழங்க புலம்பெயர் பரோபகாரியொருவரின் உதவியுடன் 10ஆயிரம் லீற்றர் கொள்ளக் கூடிய பாரிய நீர்த்தாங்கியொன்று 25 இலட்ச ரூபா செலவில் நிருமாணிக்கப் பட்டுள்ளது. அது நாளை கொடியேற்ற தினத்தன்று மாலை 4 மணியளவில் சம் பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட வுள்ளதென ஆலயத் தலைவர் சு.சுரேஸ் தெரிவித்தார்.

You may like these posts

Comments