திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தை சேர்ந்த  செல்வி. மதுமிதா  என்ற மாணவி கலைப்பிரிவில் அம்பாரை மாவட்டத்தில் முதலிடம்.

வெளியாகிய க.பொ.த. உயர்தரப் தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் கலைப்பிரிவில்  3 ஏ சித்திகளைப் பெற்று  மாவட்ட அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில்  முதலிடம் பெற்றுள்ளார் விநாயகபுரத்தை சேர்ந்த  செல்வி. மதுமிதா  என்ற மாணவியே முதலிடம் பெற்றுள்ளார்.

இவர் திருக்கோவில் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்று அப்பாடசாலைக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை தேடிதந்துள்ளார். அத்தோடு இம் மாணவி திருக்கோவில் கத்தோலிக்க திருச்சபைக்குரிய விடுதியில் தங்கியிருந்து தனது கல்வியை கற்ற மாணவி என்பது குறிப்பிடதக்கது.

இப் பாடசாலையில் மேலும் அதிக மாணவர்கள் பல்கழைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.