அம்மன் கோவிலில் உள்ள மடைக்குரிய வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை முதலியன வாங்குமிடத்தில் ஒருவர் பூசைப்பொருட்கள் மற்றும் அம்மனுக்கு உரிய அடையாள
நேர்த்திகடன் என்பவற்றை பெற்றுகொண்டு அதற்குரிய பணத்தை கொடுத்து இருக்கிறார் . மடத்தில் பணத்தின் மிகுதி இல்லதாபடியால் பற்று சீட்டின் பின் புறத்தில் மிகுதி தொகையை எழுதி கொடுத்துள்ளனர் .
சிறிது நேரம் கழித்து மிகுதி பணத்தை கேட்டபொழுது மட ஊழியர் பற்று சீட்டை வாங்கிவிட்டு பணத்தை கொடுத்துவிட்டு அம்மாளின் படம் அச்சிடப்பட்டுள்ள பற்று சீட்டை கிழித்து கீழே எறிந்துள்ளார் . அதற்கு பற்று சீட்டை வாங்கியவர் ஏன் இப்படி கண்ணகி அம்மாளின் பற்று சீட்டை இப்படி கிழித்து போடுகிறீர்கள் இதனால் ஆலயத்தின் நன்மதிப்பு குறையும் என்று சொல்ல .. அந்த ஊழியர் கோபத்துடன் "நான் அப்படிதான் செய்வேன் நீ கோவிலை விட்டு வெளியால போ " என்று மரியாதை அற்ற முறையில் நடந்துள்ளார். இச் செயல் அங்கிருந்த பக்த்தர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது . இவர் பற்றி நிறைய பேர் ஆலய நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளனர் . இதை ஆலய நிர்வாகம் கவனிக்க வேண்டும் .
இது போன்ற ஒரு சிலரின் நடவடிக்கையால் தான் ஆலயத்திற்கும் நிர்வாகத்திற்கும் கெட்ட பெயர் .
( இவரை பியசேன எம்.பியுடன் அடிக்கடி காணலாம் )