Contact Form

Name

Email *

Message *

கலை இலக்கிய விழா - 2013

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச கலாசாரப் பேரவையின் கலை இலக்கிய விழா நேற்று(03.10.2013) பிற்பகல் 2.30மணியளவில் திகோ/ தம்பிலுவி…

Image

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச கலாசாரப் பேரவையின் கலை இலக்கிய விழா நேற்று(03.10.2013) பிற்பகல் 2.30மணியளவில் திகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் திருக்கோவில் பிரதேச பிரதேசசெயலாளர் கலாநிதி.M.கோபாலரெத்தினம்  அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.





























இன் விழாவின் போது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் கௌரவ.விமலவீர திஸாநாயக்க, மற்றும் விசேட அதிதிகளாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ P.H.பியசேன, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு. C.W.U.வெலிக்கல, அம்பாரை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் திரு.K.விமலநாதன், அம்பாரை மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளர் கௌரவ. கலாநிதி.K.புஸ்பகுமார், திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ V.புவிதராஜன் ஆகியோரும்

கௌரவ அதிதிகளாக திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.R.சுகிர்தராஜன், திருக்கோவில் பிரதேச நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் திரு.G.சுஜித்ரன், அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஜனாப் A.S.தௌபீக் ஆகியோரும் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர், திருக்கோவில் பிரதேசவாழ் கலைஞர்கள், பொது மக்களும் மற்றும் ஏனையோரும் கலந்து கொண்டனர்.

இவ் விழாவினைச் சிறப்பிக்கும்முகமாக சமூக, சமய, கலாசாரத் துறைகளில் கலைஞர்கள் ஆற்றிவரும் சேவைகளினை பாராட்டி நினைவுச்சின்னம், சான்றிதழ்கள் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டது.
                                                                                                                             மற்றும் இவ் விழாவின் போது தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய மாணவிகளின் புஸ்பாஞ்சலியுடனான பரத நாட்டியம் மற்றும் கிராமிய நடனம், மகேஷாஞ்சலி நர்த்தனாலயத்தின் வரவேற்பு நடனம் மற்றும் மயில் நடனம், திருக்கோவில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நாட்டிய நாடகம், திருமதி. சிவகாமிதேவி முருகமூர்த்தியவர்களின் நெறியாள்கையில் இடம்பெற்ற பாசுபதாஸ்த்திரம்- நாட்டுக்கூத்தும், திரு.V.உதயகுமாரின் காத்தவராயன் கும்மியும் நிகழ்வும் இடம்பெற்றது.

You may like these posts