Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் காஞ்சிரங்குடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் பலி, 23 பேர் காயம் 3rd Update

News By - Parthipan G.S    திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடாவில் இன்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 6 பேர் பலியானதுடன் 23 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார…

Image
News By - Parthipan G.S   திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடாவில் இன்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 6 பேர் பலியானதுடன் 23 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கன்ரர் ரக வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அம்பாறையிலிருந்து சிலர் மேற்படி கன்ரர் வாகனத்தில் உல்லே பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வரும் வழியிலேயே காஞ்சிரங்குடா சாகம வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதி திடீரென வாகனத்தின் பிறேக்கை அழுத்தியபோது அவ்வாகனம் சரிந்து விழுந்தது. இவ்வாகனத்தில் பயணம் செய்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.






Previous Update  ----------------------------------------------------------------------------------------------------------
இன்று மாலை 6.00 மணியளவில் காஞ்சிரங்குடா வீதியில் பாரிய வாகனவிபத்து இதில்  குழந்தை உட்பட நான்கு பேர் உடன் மரணம் பலரின் நிலமை மிக மோசமாகவுள்ளதுடன் கவலைக்கிடமாகவுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. 
இவர்கள் அம்பாறை ஹிந்குரனையை சேர்ந்தவர்கள்  உல்லை க்கு சென்று திரும்பி வரும் வழியில்  இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது 
காயட்பட்டவர்கள் தற்போது திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .    இன்னும் சிலர் எழுவேட்டுவான் வைத்திய சாலைக்கு அனுப்பபட்டுள்ளனர்
2nd Update  News By -Pathurjan
இவ் விபத்தினால் காயப்பட்டவர்களில் 3 பேரின் நிலை மிக மோசமாக உள்ளது . அதிகமானவர்களுக்கு முறிவுகள் ஏற்பட்டுள்ளன .    சம்பவத்தின் போது 25 பேர் வாகனத்தில் வந்துள்ளனர் . 
தற்போது 11 அம்புலன்ஸ் சேவைகளில் உள்ளது . 
மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்

You may like these posts

Comments